Header Ads



பலஸ்தீனுக்கு செல்லமாட்டேன் என்ற மோடியை, புகழ்கிறது இஸ்ரேல்

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 தேதிகளில் இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது இஸ்ரேலின் எதிரி நாடான பாலஸ்தீன நாட்டுக்கு செல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ள மோடி, பாலஸ்தீன தலைவர்களை சந்தித்துப் பேசும் திட்டம் ஏதுமில்லை என்றும் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், 70 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் நாட்டுக்கு வருகை தரும் இந்திய பிரதமர் என்ற வகையில் மோடியை சந்தித்துப் பேசும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவரது வருகையின்போது இந்தியா-இஸ்ரேல் இடையிலான 25 ஆண்டுகால நல்லுறவின் அடையாளமாக பாதுகாப்புத்துறை மற்றும் வர்த்தகம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும் என நம்புவதாகவும் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதற்கான ஒப்புதலை அந்நாட்டின் பாராளுமன்றம் கடந்த வாரம் அளித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் அதிபர் ரேவென் ரிவ்லின் மற்றும் அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஐசக் ஹெர்ஸோக் ஆகியோரையும் சந்தித்துப் பேசும் பிரதமர் மோடி, டெல் அவிவ் நகரில் வசித்துவரும் சுமார் 4 ஆயிரம் இந்தியர்களிடையே வரும் 5-ம் உரையாற்றவுள்ளார். 

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடியின் வருகை குறித்து மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

அந்த ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த குரல் கொடுத்த மோடியின் அபார எழுச்சி மற்றும் இந்தியாவின் பிரதமராக அவர் செய்துள்ள சாதனைகள் தொடர்பான செய்திகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் வருகை தொடர்பாக அந்நாட்டின் பிரபல எபிரேய மொழி வர்த்தக நாளேடான ‘தி மார்க்கெர்’, ’விழித்திடுங்கள் இந்த உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார்’ ("Wake up: the most important PM
of the world is coming") என்ற தலைப்பில் ஒரு சிறப்பு கட்டுரை தீட்டியுள்ளது.

அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இஸ்ரேல் வருகையின்போது நம் நாட்டு மக்கள் அவரிடம் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால், அதற்கான பலன் ஏதும் பெரிதாக அமையவில்லை.

ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியடைந்துவரும் நாடாக 125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பிரபலமான தலைவராக இருக்கும் பிரதமர் மோடியின் வருகை தற்போது நம்மிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
விழித்திடுங்கள் இந்த உலகின் மிக முக்கியமான பிரதமர் வருகிறார்.

இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

12 comments:

  1. Who cares about this cow modi

    ReplyDelete
  2. Baber masoody muderer not welcome to holy city.

    ReplyDelete
  3. மோடி!
    உன் கோரப் பற்களிடையே காஷ்மீர் குழந்தைகளதும் பெண்களதும் மாமிசத் துண்டுகள் இருக்கும் நிலையிலும் அயோத்தி பள்ளியை உடைத்து மிதித்த உன் கால்களிடையேயுள்ள அழுக்குகளோடும் உன் நெஞ்சில் நிறைந்திருக்கும் காவி இந்துத்துவ கொலைவெறியோடும் பலஸ்தீன் செல்வது தகாது. நீ செல்வதற்கான மிகப் பொருத்தமான இடம் இஸ்ரேல் தான்.
    பலஸ்தீன் வீரமுள்ள சிறுவர்கள் வாழும் பூமி. பஸ்ஸிலும் புகைவண்டிகளிலும் செல்லும் சிறுவர்களையும் பெண்களையும் கற்பழித்து கொலைசெய்யும் காமுக காடையர்களை வளர்த்தெடுக்கும் உம்மைப்போன்ற மாட்டு மூத்திரம் குடிக்கும் மனித நெறிதவறியவர்களை கைகுலுக்க அங்கு யாரும் தயாருமில்லை என்பதை உணர்ந்தது ஒன்றே போதுமானது.

    ReplyDelete
  4. யாருக்கு அழிவோ ..

    ReplyDelete
  5. விழித்திடுங்கல் இந்த உலகின் மிக முக்கியமானகேடி வருகின்றான்

    ReplyDelete
  6. முஸ்லிம்களை எதிர்ப்பதில் மோடி மிகுந்த அக்கறை உள்ளவராக இருக்கின்றமை அவரது வலராத்தினை அறிந்தவர்களுக்கு நன்கு புரியும். ஆனால் அமெரிக்கர்களும் இந்தியர்களும் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். ஹிட்லரை விடவா இந்த மோடியும் Trump கொடியவர்கள். இஸ்ரேல் மக்கள் கூட terrorism தற்போது நம்பிக்கை குறைந்தவர்களாக இருக்கின்றனர். oil ஐ ஊற்ற ஊற்ற தான் வெளிச்சம் அதிகமாக இருக்கும். இந்தியர்களும் அமெரிக்கர்களும் மிகவும் தெளிவாகவே இருக்கின்றனர். அவர்கள் மிகவும் விரைவில் தாம் விடட தவறினை திருத்திக் கொள்வர்.

    ReplyDelete
  7. Unity between the enemies of muslims. A time for separate state within india again.

    ReplyDelete
  8. நீ போனாத்தான் என்ன போகாட்டித்தான் என்ன எங்களுக்குத் தேவை மனித நேயம் உள்ள தலைவர்கள் அங்கு சென்று அந்த மக்களின் நியாயமான உரிமைகளை வெல்ல உதவூம் தலைவர்களே முஸ்லிம்களின் இரத்தங்குடிக்கும் நீயல்ல

    ReplyDelete
  9. நீ போனாத்தான் என்ன போகாட்டித்தான் என்ன எங்களுக்குத் தேவை மனித நேயம் உள்ள தலைவர்கள் அங்கு சென்று அந்த மக்களின் நியாயமான உரிமைகளை வெல்ல உதவூம் தலைவர்களே முஸ்லிம்களின் இரத்தங்குடிக்கும் நீயல்ல

    ReplyDelete
  10. இவர் போகாமல் இருப்பதுதான் பலஸ்தீனுக்கு நல்லம்.

    ReplyDelete
  11. இரு தலைவர்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.
    இஸ்லாத்துக்கு எதிரான மத தீவிரவாதிகள்.
    ஆனால் நீங்கள் நினைக்கிறீர்களா உங்களது செயல்களால் இஸ்லாம் பாதிப்படைகின்றது என்று, உங்களது செயல்கள் அனைத்தும் எங்களுக்கு உரமாகி செழித்தோங்க வழிசமைக்கிரீர். நீங்கள் வேகமாக தாக்குங்கள் நாங்கள் அதிகமாக பலமாகிகொள்கிறோம்.

    ReplyDelete
  12. Muhammad Rasheed,
    Definitely!

    ReplyDelete

Powered by Blogger.