Header Ads



ஜனாதிபதியின் புகைப்படத்தை, பேஸ்புக்கில் சேதப்படுத்தினால் சிக்கல்

சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் புகைப்படங்களை சேதப்படுத்தி வெளியிடப்பட்டால், பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் பேஸ்புக் பக்கங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்கள் பதிவிடப்படுவதனால் அவை முடக்கப்படாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் பக்கங்களில் விமர்சனமிக்க பதிவுகளில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் பயன்படுத்தினால் சிக்கல் ஏற்படாதென ஜனாதிபதி ஊடக பிரிவு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பல புகைப்படங்கள் பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அதன் உரிமையை ஜனாதிபதி ஊடக பிரிவு பெற்றுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் புகைப்படங்களை சேதப்படுத்தி அவமதிக்கும் வகையிலான பதிவு வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் ஊடக பிரிவினால் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அரச தலைவர் என்பதனால் பேஸ்புக் வலைத்தளங்களில் ஜனாதிபதியின் புகைப்படங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.