Header Ads



பொலிஸாரால் தேடப்படும் ஞானசாரா, வைத்தியசாலையில் சிகிச்சை

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவலை தேரரின் சட்டத்தரணி, மேல்முறையீடு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தொடர்பான வழக்கு மேல்முறையீடு நீதிமன்றத்தில் நேற்று -31- விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது ஞானசார தேரர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் நீதிமன்றம் வராமைக்கான காரணத்தை சட்டத்தரணி நீதிமன்றில் வெளிப்படுத்தினார்.

ஞானசார தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்யும் வைத்திய அறிக்கை ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை மீண்டும் எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.