Header Ads



மக்கா தாக்குதல், குவிகிறது கண்டனம், ஈரான் மௌனம்


புனித நகரான மக்காவில் உள்ள மிகப் பெரிய பள்ளிவாசலில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதலை, சவுதி அரேபியப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது.

இரு தீவிரவாதக் குழுக்கள் இணைந்து தாக்குதலுக்குத் திட்டமிட்டதாய் சவுதி அரேபிய உள்துறை அமைச்சுப் பேச்சாளர் கூறினார். மூன்றாவது குழு, ஜெட்டா நகரில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது.

வழிபாடு நடத்துபவர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்து.

இதனையடுத்து தற்கொலை குண்டுதாரியை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதன்போது பயங்கரவாதி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.

இந்த அனர்த்தம் காரணமாக சம்பவத்தில், ஆறு வெளிநாட்டினரும், ஐந்து பாதுகாப்புப் படை அதிகாரிகளும் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பல நாடுகள் தமது கண்டனத்தையும், கவலையையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஈரான் இத்தாக்குதலுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காது மௌனம் காத்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. கோழைத்தனமான அப்பன் பெயர் தெரியாதவனின் அடாவடித்தனம்.

    ReplyDelete
  2. ஏன் இவர்களே இதைசெய்யமாட்டார்கள் என்பதற்க்கு ஆதாரம் ஏதேனும் உண்டா..

    ReplyDelete

Powered by Blogger.