Header Ads



இஸ்லாமிய இனவாதிகள் புத்தரின் குணத்தை, சாத­க­மாக பயன்­ப­டுத்துகின்றனர் - பொது­பல சேனா

மியன்மார் நாட்டு  முஸ்­லிம்கள் கிழக்கு பகு­தியில் குடி­ய­மர்ந்து கொண்டு தற்­போது வெளி­யேற மறுக்­கின்­றார்கள்.  அவர்­க­ளுக்கு அடைக்­கலம் வழங்­கு­மாறு கிழக்கு முத­ல­மைச்­சரும் கோரி­யுள்ளார்.எனவே, இந்தச் செயற்­பா­டு­களை பார்த்­துக்­கொண்டு பெளத்­தர்கள் என்றும் பொறு­மை­யாக இருக்­க­மாட்­டார்கள் என பொது­பல சேனா அமைப்பு எச்­ச­ரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வர­லாற்றை மாற்றி கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பெளத்­தர்­களின் வர­லாற்று சின்­னங்­களை அழித்து அப்­ப­கு­தியை இஸ்­லா­மி­யர்­களின் பூர்­வீக பூமி­க­ளாக்கிக் கொள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கின்­றார்கள் என்றும்  அந்த அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞனா­சார தேரர் தெரி­வித்தார்.

பொது­பல சேனா அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், 

தற்­போது நாட்டின் கிழக்குப் பகு­தியில்  மியன்மார் நாட்டைச் சேர்ந்த  முஸ்­லிம்கள் சிலர் வருகை தந்­துள்­ளனர்.

அவர்கள் பங்­ளா­தே­ஷி­லி­ருந்து மியன்மார் நாட்­டு­க்குச் சென்று அந்­நாட்­டி­லுள்ள பிக்­கு­களின் மதக் கட­மை­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­தனர். அதனால் அவர்­க­ளுக்கு மியன்மார் நாட்­டி­லுள்ள பிக்­கு­க­ளுடன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டனர்.

இந்­நி­லை­யி­லேயே தற்­போது இவர்கள் இலங்­கையின் கிழக்கு பகு­திக்கு வந்­துள்­ளார்கள். அவர்­களின் உண்­மை­யான நிலைப்­பாட்டை அறி­யாமல் அவர்­க­ளுக்கு கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் மேற்­படி சமூ­கத்­திற்கு அடைக்­கலம் கொடுக்க இலங்கை அர­சாங்கம் ஒப்­புக்­கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்­துள்ளார்.

எமது நாட்டில் இன்று வெசாக் கொண்­டாட்டம் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் அனை­வரும் புத்தர் போதித்த சாத்­வீக குணத்தை கடை­பி­டித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

அவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்தை சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு இஸ்லாமிய இனவாத சக்திகள் பலனடைய முற்படுகின்றன. மேற்படி மியன்மாரிலிருந்து வருகை தந்த முஸ்லிம் சமூகத்தினரால் மியன்மார் நாட்டுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்றார்.

3 comments:

  1. ஒரு புது வகையான பைத்தியக்காரர் இந்தத் தேரர். புத்த சமயத்தின்
    அவமானச் சின்னமாகத் தொடர்ந்தும் இருக்காமல் தெளிவு பெறுவாரா?

    ReplyDelete
  2. He should learn the history of Islam on how tyrone like Fir'oun was punished. UN report says crime against humanity committed by the Myanmar government. INJUSTICE WILL NOT LAST LONGER

    ReplyDelete
  3. I hope that you dont know about Islam and dont know history of current terrorism. you are very poor buddy. There is no Islamic terrorism. ( All the Islamic terrorism created by Bible follower for the $)try to learn buddy

    ReplyDelete

Powered by Blogger.