Header Ads



சீரற்ற காலநிலை, உயிரிழப்பு அதிகரிப்பு, சப்ரகமுவ பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல்வேறு பகுதிகளுக்கும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, கலவானை, எஹெலியகொட உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2

தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த செய்தியினை சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் காரியாலயம் வெளியிட்டுள்ளது. 
3
சப்புகஸ்கந்த - ஹெய்யங்கந்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் 3 பெண்கள் பலியாகியுள்ளனர். குறித்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.