Header Ads



உயிரைக் காப்பாற்ற, மேல்மாடிக்கு ஓடிய அமைச்சர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கில் நிதி இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் அவரது மகனான தெற்கு மாகாண சபை உறுப்பினர் பசந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் ஆபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அவர்களின் வீடு 15 அடி அளவு நீரில் மூழ்கியுள்ளதாகவும், அவர்கள் தங்கள் வீட்டின் மேல் மாடியில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவியை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களின் உயிரை காப்பாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஹெலிகப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டில் மாத்தறையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் பின்னரான காலப்பகுதியில் தற்போது பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.