Header Ads



மொனராகலை சிறையில், புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு


மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்துள்ளார்.

குறித்த பள்ளிவாசலை இன்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

சிறைச்சாலைகளில் சர்வ மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் ஊடாக நல்ல சமூகமொன்றினை கட்டியெழுப்பும் திட்டத்துக்கு அமைவாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.என்.சீ தனசிங்க உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

No comments

Powered by Blogger.