Header Ads



தம்­ப­தியர் தொலைக்­காட்சி பார்த்­தபோது, பின்­பு­ற­மாக வீட்­டுக்குள் நுழைந்த யானை - பெண் பலி

அம்­பாறை திருக்­கோவில் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கஞ்­சி­கு­டிச்­சாறு கிரா­மத்தில் ஞாயிற்­றுக்­கிமை இரவு 10.00 மணி­ய­ளவில் காட்டு யானை தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி பெண் ஒருவர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கண­வ­னும் ­ம­னை­வியும் வீட்டில் தொலைக்­காட்சி பார்த்துக் கொண்டு இருந்த போது காட்­டு­யானை வீட்டின் பின்­பு­ற­மாக வந்து வீட்டின் சுவரை உடைத்துள்ளது.

கண­வனும், மனை­வியும் வெளியில் வந்து பார்த்தபோது யானை இரு­வ­ரையும் துரத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில் யானை பெண்ணை வயிற்றுப் பகு­தியில் மிதித்ததால் பெண் உயிர் இழந்­துள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­துள்­ளனர்

இவ்­வாறு உயிர் இழந்த பெண் கஞ்­சி­கு­டிச்­சாறு பிர­தான வீதியைச் சேர்ந்த 53 வய­து­டைய முத்­துப்­பிள்ளை மகேஸ்­வரி என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

சடலம் அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் வைக்­கப்­பட்­டுள்­ளது. சம்­பவம் அறிந்த திருக்­கோவில் பொலிசார் சம்­பவ இடத்­திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.