Header Ads



'ராஜபக்சவினரின் திட்டம், அழுகி நாற்றம் எடுக்கிறது'

ராஜபக்சவினர் தமது ஆதரவாளர்கள் மத்தியில் பொய் கூறும் நபர்களாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச தன் பின்னால் வரும் மக்களை தொடர்ந்தும் தன்னோடு இருக்க வைப்பதற்காக ஆட்சியை கைப்பற்ற போவதாக கூறி வருகிறார்.

தன் பின்னால், வரும் தன்னோடு இருக்க வேண்டுமாயின் அவர் இதனை அடிக்கடி கூறியாக வேண்டும்.

அப்படியில்லை என்றால் மக்கள் அவருக்கு பின்னால் செல்ல மாட்டார்கள். சிறிது காலத்தில் ஆட்சியை பிடிப்பேன் என்று மகிந்த கூறாவிட்டால், அவரைச் சுற்றி உள்ளவர்களை தேடி கண்டுபிடிக்கவும் முடியாது.

இதனால், மகிந்தவுக்கு இந்த பொய்யை தொடர்ந்தும் கூறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த பொய்யை தொடர்ந்தும் கூறி ராஜபக்சவினர் பொய்யர்களாக மாறிவிட்டனர்.

ராஜபக்சவினரின் திட்டம் நாளுக்கு நாள் அழுகி நாற்றம் எடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளது என கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.