Header Ads



முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் கணக்காய்வு - முன்னைய அதிகாரிகளுக்கு அச்சம்

முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ்வரும், முஸ்லிம் சமய திணைக்களத்தில் முதன்முறையாக கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் திணைக்களத்தில் நடந்த மோடிகள், அவற்றுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் ஊழல் நடவடிக்கைகள் இதுனமூலம் பகிரங்கமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக முந்திய காலத்தில் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் அரசியல் செல்வாக்குடன் உட்புகுந்த சிலர் அச்சமடைந்துள்ளதாகவும், தற்போது முஸ்லிம் சமய விவகார அமைச்சர் மற்றும் திணைக்களம் மீது ஊடகங்களில் போலியான விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் அறியவருகிறது.

முஸ்லிம் சமய விவகார அமைச்சுடன் தொடர்புடைய உயர் அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.