Header Ads



சிறிகொத்தா மீது துப்பாக்கி பிரயோகம் - பொலிஸ் கான்ஸ்டபிள் கைது


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையமாக சிறிகொத்தா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையத்தில் உள்ள யானை சின்னத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சு செயலாளரின் புறக்கோட்டை, எபிட்டமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இன்று மாலை கடமைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, குறித்த கான்ஸ்டபில் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தற்போதுவரையில் தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் மீண்டும் வழமையை போல் குறித்த செயலாளரின் வீட்டிற்கு சென்று கடமையில் ஈடுப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் கான்ஸ்டபில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரிடம் மனநல மருத்துவ அறிக்கை ஒன்று பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.