Header Ads



மத்திய மாகாணத்தை கைப்பற்ற UNP தீவிர முயற்சி - ரணில் நாடு திரும்பியதும் தீர்மானம்

-எம்.எம்.மின்ஹாஜ்-

மத்திய மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதன்பிரகாரம் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் சுயாதீனமாக செயற்பட போவதாக அறவித்துள்ளனர். 

இது தொடர்பில் மத்திய மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சானக ஐலப்பெரும கேசிரி குறிப்பிடும் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர் அதிரடி தீர்மானங்களை எடுக்கவுள்ளோம். இதன்படி பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைவாக தீர்மானங்கள் எடுப்போம் என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.