Header Ads



மக்களை காப்பாற்றும் போது, ஹெலிகப்டரில் இருந்து வீழ்ந்த வீரருக்கு கௌரவம்

இயற்கையின் கோர தாண்டவம் காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்ட விமானபடை சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த விமானபடை அதிகாரிக்கு இறந்தப் பின்னர், இன்றைய தினம் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளின் போதே, குறித்த சிப்பாய் உயிரிழந்தார்.எனவே, இலங்கை விமானப் படையின் வாரண்ட் அதிகாரியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

காலியில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது, ஹெலிகப்டரில் இருந்து கீழே வீழ்ந்த நிலையில் காயமடைந்த விமானபடை சிப்பாய் உயிரிழந்தார்.

இலங்கை விமான படையில் பணியாற்றும் வை.எம்.எஸ்.யாப்பாரத்ன என்ற 38 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.