Header Ads



சுதந்­திரக் கட்­சியின் மஹி­யங்­கனை அமைப்­பா­ள­ரான, பொதுபலசேனா முக்கியஸ்தர் விஜித தேரருக்கு அச்சுறுத்தல்

-ARA.Fareel-

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மஹி­யங்­கனை தொகுதி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பொதுபலசேனா முக்கியஸ்தர் கே.பி. குண­வர்­தன அடி­யாட்­களை தனது விகா­ரைக்கு அனுப்பி தன்னை அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் இதன் பிறகு கவ­ன­மாக இருக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்­ள­தா­கவும் ஜாதிக பல சேனாவின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் மஹி­யங்­கனை கிராந்­து­ரு­கோட்ட பொலிஸ் நிலை­யத்தில் நேற்று முன்­தினம் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக தனது உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் மஹி­யங்­க­னையில் வாழ முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்கும் வட்­ட­ரக்க விஜித தேரர் இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேரில் சந்­தித்து நிலை­மையை விளக்­க­வுள்­ள­தா­கவும் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் மஹி­யங்­கனை தொகுதி அமைப்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள கே.பி. குண­வர்­தன மஹி­யங்­கனை பிர­தே­சத்தின் பொது­பல சேனாவின் செயற்­பாட்­டா­ளரும் ஞான­சார தேரரின் நெருங்­கிய நண்­ப­ரு­மாவார். அவ­ருக்கு மஹி­யங்­கனை நகரில் கடந்த வியா­ழக்­கி­ழமை பொது வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது.

இந்த வர­வேற்பு நிகழ்வில் பொது­ப­ல­சே­னவைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 6 பௌத்த தேரர்­களும் கலந்து கொண்­டனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை கே.பி குண­வர்­த­னவின் ஆத­ர­வா­ளர்கள் அவ­ரது கெப் வண்­டியில் மஹி­யங்­க­னையில் உள்ள வட்­ட­ரக்க விஜித தேரரின் மகா­வலி மஹா விகா­ரைக்குச் சென்று அவ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். அச் சமயம் விகா­ரையில் விஜித தேரரின் சீடர்­களே இருந்­துள்­ளனர். விஜித தேரர் வெளியில் சென்­றி­ருந்தார்.

மஹி­யங்­க­னையில் அண்­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்­மை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைளின் பின்­ன­ணியில் தற்­போது சுதந்­திரக் கட்­சியின் தொகுதி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குண­வர்­த­னவே செயற்­பட்டார் எனவும் வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­விக்­கிறார்.

ஜாதிக பல­சே­னவின் செய­லாளர் வட்டரக்க விஜித தேரர் முஸ்லிம்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பதை எதிர்த்து பொதுபலசேனவின் செயற்பாட்டாளர்கள் அவரைத் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான முறைப்பாடுகளும் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவாகியுள்ளன.

விடிவெள்ளி

No comments

Powered by Blogger.