பர்தா அணிந்த, ஆண் கைது
கண்டியில் பர்தா அணிந்து சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனைவி மீது சந்தேகம் கொண்ட குறித்த நபர் கள்ளத் தொடர்பை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கில் இவ்வாறு பர்தா அணிந்து, கண்டி குட்செட் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைத்து கைது செய்ய முயற்சித்த போது பஸ்ஸில் ஏறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும் பொலிஸார் குறித்த நபரை மடக்கிப் பிடித்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணை நடத்திய போது பர்தா அணிந்திருந்தது பெண் அல்ல ஓர் ஆண் என தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் நடத்திய விசாரணைகளின் போது தமது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரைக் கண்காணிக்க இவ்வாறு ஆடை அணிந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மனைவி கம்பளையில் ஓர் நிறுவனத்தில் கடமையாற்றி வருவதாகவும் மனைவி கள்ளத் தொடர்பு ஒன்றை பேணுவதாக சந்தேகம் ஏற்பட்டதாகவும், அதனை கையும் களவுமாக பிடிக்கும் நோக்கிலேயே பர்தா அணிந்து குட்செட் பகுதியில் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் மயிலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த நபரின் மனைவியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Post a Comment