Header Ads



6 கிலோ தங்கத்தை கடத்திய, விமான நிலைய ஊழியர் சிக்கினார்

மூன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவற்றின் நிறை ஆறரை கிலோ எனத் சுங்கப் பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

மேலும் சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 27 வயதான இளைஞராகும். 

No comments

Powered by Blogger.