Header Ads



5 நாட்களாக நடவடிக்கை, வீடுகளை உடைத்த, கபராயா கொம்பன் பிடிபட்டான்

ஹம்பாந்தோட்டை சூரியவெவ போகாஹாஹிதிவெவ மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து 23 வீடுகளை உடைத்து சேதப்படுத்திய கபராயா என்ற கொம்பன் யானையை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஹம்பாந்தோட்டை அலுவலக அதிகாரிகள் 5 நாட்களாக மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் இன்று -'4- இந்த காட்டு யானை பிடிப்பட்டுள்ளது.

திம்புகம என்ற பகுதியில் வைத்து தாம் யானையை பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடித்த யானையை அனுராதபுரம் - ஹொரவபொத்தானை காட்டு யானைகள் காப்பகத்திற்கு எடுத்துச் செல்ல உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த கொம்பன் யானை சூரியவெவ பிரதேசத்தை சூழவுள்ள சில கிராமங்களில் சுமார் 23 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.