Header Ads



ஜனாதிபதியின் கோட்டையில், முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் - 3 சிங்கள அமைப்புகள் களத்தில்..!

பொலன்­ன­றுவை ஓனே­கம பகு­திக்கு  விஜயம் செய்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான பௌத்த குரு­மாரும் மற்றும் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரும் அப்­ப­கு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­களின் மாட்டுத் தொழு­வங்கள் மற்றும் கொட்­டில்­களைக் கழற்றி எறிந்­த­துடன் முஸ்­லிம்­க­ளையும், இஸ்­லாத்­தையும் அவ­தூ­றாகப் பேசி­ய­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­போது பிக்­குகள் முஸ்­லிம்கள் ஜல­கெ­லும்­மின்ன வன பாது­காப்பு பிர­தே­சத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ள­தாக குற்­றச்­சாட்­டி­ய­துடன் அங்­கி­ருந்து வெளி­யேற வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்­டனர். இச் சம்­ப­வங்­களின் போது அவ்­வி­டத்­திற்கு பொலி­ஸாரும் சமு­க­ம­ளித்­தி­ருந்­தனர்.

இதே­வேளை, பௌத்த சைத்­திய நிர்­மா­ணத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கற்­களை பயன்­ப­டுத்தி முஸ்­லிம்கள் மாட்டுத் தொழு­வத்தை  நிர்­மா­ணித்­துள்­ள­தாக பொது­ப­ல­சே­னாவின் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

சோமா­வதி வன பாது­காப்பு எல்­லையில் ஜல­கெ­லும்­மின்ன வன பாது­காப்பு பிர­தேசம் அமைந்­துள்­ள­தா­கவும், இப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் சுமார் 2000 ஏக்கர் நிலத்தில் விவ­சாயம் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இதனால் அப்­ப­கு­தியில் இருந்த சுமார் 18 பௌத்த சைத்­தி­யங்கள் அழி­வுக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் பொது பல சேனாவின் ஊட­கப்­பி­ரிவு மேலும் தெரி­வித்­துள்­ளது.

முஸ்­லிம்கள் சுமார் 200 வரு­டங்­க­ளுக்கும் மேற்­பட்ட மருத மரங்­களை வெட்டி காடு­களை அழித்­துள்­ள­தா­கவும் அவ்­வ­மைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த செயற்­பா­டு­களில் பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­கள ராவய, சிங்­கலே அபி அமைப்பு என்­ப­ன­வற்றின் குரு­மார்கள் கலந்து கொண்­டனர்.

இச்­சம்­ப­வத்தை அடுத்து அப்­ப­குதி முஸ்­லிம்கள் பீதி அடைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வட மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எஸ்.எச்.எம்.அன்ஸார் நேற்று மாலை ஓனே­க­மைக்குச் சென்று மக்­களைச் சந்­தித்து விப­ரங்­களைத் திரட்­டி­யுள்­ள­துடன் இது தொடர்பில் லங்­கா­புர பொலிஸில் முறைப்­பாடு செய்­வ­தற்கும் ஏற்­பா­டு­களை மேற்கொண்டார்.

ஜாதிகபல சேனாவின் செயலாளர் வட்டரக்க விஜிததேரர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் முன்பு குறிப்பிட்டது போன்று உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக செயற்படுவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.

 ARA.Fareel

2 comments:

  1. Who is playing this game? UNP blaming My3 government but both are same, it could be another plan to grab the Muslim vote for UNP again
    Prime minister with his all power didn't even open his mouth against this thugs

    ReplyDelete
  2. நள்ளாட்சியில்லை நாயாட்சி நாட்டில் நடக்கிறது .மகிந்த கொலைகள் ,கொள்ளைகள் செய்து சரி நாட்டை முக்கியமாக பாதைகளை அபிவிருத்தி செய்தாரு இவன் வந்து சும்மா காலத்தை தான் கடத்துறாரு !

    ReplyDelete

Powered by Blogger.