Header Ads



'நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தினால், அதனை தடுக்க போவதில்லை'

நாட்டுக்கு நன்மை ஏற்படுத்தினால் அதனை தடுக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  தற்போதைய அரசாங்கம் நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதற்கு இடையூறு விளைவிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் சில பிழையான செயற்பாடுகளே விமர்சனங்களை முன்வைக்கக் காரணமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி கட்டம்பே பிரதேசத்தில் விஹாரை ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.