Header Ads



பௌத்த இனவாதத்தினை முதலீடாக்க முயற்சி - ஒரு பொரி போதும், முழுவதும் எரிய..

-AL Thavam-

இன்று (21.04.2017) இறக்காம மாயக்கல் மலையடிவாரத்தில் விகாரை அமைக்க எடுத்த முயற்சிகளைத் தடுக்க முடிந்த போதிலும், மகிந்த சார்பான பெரும்பான்மை மாகாண சபை உறுப்பினர்களின் பிரசன்னம் மனச்சுமையினைத் தந்தது. 

மீண்டும் பௌத்த இனவாதத்தினை முதலீடாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை உணர முடிந்தது. இதற்கு இன்றைய ஆட்சித் தலைவர்களின் இயலாமையும் அடிபணிதலுமே காரணமாகத் தோன்றுகிறது. சிறுபான்மை ஒடுக்குவாதம் இலங்கையில் அவசரமாக ஓயப்போவதில்லை என்ற சமிக்ஞையும் தெரிகிறது. 

நிதானமான சணக்கிய அணுகுமுறைகளூடாக சட்ட வரைமுறைகளுக்குள்ளிருந்து முஸ்லிம்கள் செயற்பட வேண்டிய கட்டத்தில் உள்ளோம். குறிப்பாக இளைய தலைமுறையினர் தங்களது வார்த்தைப் பிரயோகங்களில் மிக்க கனமாக இருக்க வேண்டும். ஒரு பொரி போதும் முழுவதும் எரிந்து கொள்ள. இன்று களத்தில் அதனை நாம் உணர்ந்தோம். அவர்கள் நம்மை அதற்கு தூண்ட எத்தனிக்கிறார்கள்

No comments

Powered by Blogger.