Header Ads



முசலி மண் மீட்புப் போராட்டத்திற்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் ஆதரவு


மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார் ஜமீல், பைரூஸ் ஹாஜி, மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், இப்றாஹிம் மற்றும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் களத்துக்கு வந்த சட்டக்கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்கள் ஆகியோரை படத்தில் காணலாம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் பின்னர் முசலி பிரதேச மக்கள் வாழ்ந்து காடாகி கிடக்கும், வன பரிபாலனத் திணைக்களம் சொந்தமாக்கியுள்ள காணிகளையும் அமைச்சர் காட்டினார்.


1 comment:

  1. Unity is of paramount importance to solicit the help of Allah.

    ReplyDelete

Powered by Blogger.