மஹிந்தவுக்கு, மைத்திரி ஏற்படுத்திய அதிர்ச்சி..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிகவரெட்டி தொகுதியின் அமைப்பாளராக இருந்த மஹிந்த அணியின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நீக்கி குறித்த பதவிக்கு பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவை சு.கவின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முக்கியமானவர். இவர் மீது கடுமையான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளும் தேசிய அரசால் சுமத்தப்பட்டுள்ளதுடன், பல தடவைகள் பெரிய ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டைகளின் ஒன்றான நிக்கவரெட்டி தொகுதியின் அமைப்பாளராகப் பதவி வகித்து வந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையில் நேற்று முதல் அந்தப் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் எனவும், குறித்த தொகுதிக்கு பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் சு.கவின் உயர்பீடம் அறிவித்துள்ளது.
மே தினம், உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்று பரபரப்பான சூழலில் ஜோன்ஸ்ட் பெர்னாண்டோவின் பதவி பறிப்பானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
அதேவேளை, இந்தப் பதவி பறிப்பால் மஹிந்த அணியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவர் மகிந்தருக்கு எங்கே அதிர்ச்சி கொடுக்கப்
ReplyDeleteபோகிரார் இந்த இடத்தில் உட்கார வைத்த
எமக்கல்லவா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
தருகிரார்