Header Ads



முதலாம் தரத்திலிருந்து ஆங்கிலப் பாடம் - கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகளில் முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தரம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி அறிவை விரிவுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

இது சம்பந்தமாக கவனம் செலுத்துமாறு அமைச்சர், தேசிய கல்வி நிறுவகம், கல்வியமைச்சின் ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் பிரிவின் அதிகாரிகள் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலைகளில் தற்போது மூன்றாம் தரத்தில் இருந்தே ஆங்கில பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதனை தவிர ஆங்கில மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களின் மொழியை கற்பிக்கும் திறமையை அதிகரிக்க விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்தள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. மும்மொழிகள், ஒழுக்கவியல் ஆகிய பாடங்கள் இலங்கை மாணவர்களுக்கு இன்றியமையாதன.

    ReplyDelete

Powered by Blogger.