Header Ads



குப்பை மேடு சரிந்தமை, மனித நடவடிக்கையா..? பல்கோண விசாரணை ஆரம்பம்

(எம்.எப்.எம்.பஸீர்)

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமை இயற்கையாக ஏற்பட்டதா அல்லது  மனித நடவடிக்கை ஒன்று காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  பல்கோண விசாரணை ஒன்று பல குழுக்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

இந்த விசாரணைகள் தொடர்பில் சொகோ எனப்படும் குற்றம் இடம்பெற்ற இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரிக்கும் தடயவியல் பிரிவும் சிறப்பு விசாரணைகளை நடத்தியுள்ளது. இதனை விட இது தொடர்பில் பேராதணை பல்கலைக்கழகத்தின் புவியல் பிரிவின் 10 பேர் கொண்ட விஷேட குழுவொன்றும் மீதொட்டமுல்ல அனர்த்தம் சம்பவித்த பகுதிக்கு அழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 

2 comments:

  1. பிரதமர் நாட்டில் இல்லாத வேளை நடந்துள்ளமையினால் சதி நடவடிக்கையாக கூட இருக்கலாம் ஏன் என்றால் அனர்த்தங்கள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அநேகம் நாட்டு தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களின்;போதுதான் நடந்துள்ளன

    ReplyDelete
  2. பின்ன,குப்பையை மனித குடியிருப்பில் கொட்டியது ஏலியன்களா????

    ReplyDelete

Powered by Blogger.