முக்கிய 2 பேரை வெளியேற்றியது SLFP
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், தம்புள்ளை தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாத்ததும்பர தொகுதியின் அமைப்பாளர் பதவியில் இருந்து லொஹான் ரத்வத்தே நீக்கப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு பதிலாக புதிய அமைப்பாளர்களை ஜனாதிபதி இன்று நியமித்துள்ளார். லொஹான் ரத்வத்தே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான அனுருத்த ரத்வத்தேவின் புதல்வராவார்.
அனுருத்த ரத்வத்தே, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
லொஹான் ரத்வத்தே மற்றும் ஜனக்க பண்டார தென்னகோன் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வருகின்றனர்.
Post a Comment