Header Ads



பல் துலக்­காத 14 வய­து, சிறுவன் மீது வாயில் சூடு - மாமா­ கைது

பல் துலக்­காத குற்­றத்­துக்­காக 14 வய­தான சிறுவன் ஒருவன்    அவ­ரது மாமா­வினால் வாயில் சூடு வைக்­கப்­பட்டு காயப்­ப­டுத்­தப்­பட்ட சம்­பவ  மொன்று மது­ரங்­குளி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. 

தாய் பணியின் நிமித்தம் வெளி­நாட்­டுக்கு சென்­றுள்­ள­மை­யினால் இச்­சிறுவன் அவ­ரது மாமாவின் வீட்டில் வசித்து வந்­துள்ளார். 

அதன்­போது தினமும் காலை பல்­துலக்­கு­வ­தற்கு இச்­சி­றுவன் முரண்டு­ பிடிப்­ப­தனால் அவ­ரது மாமா, அடுப்பில் எரிந்­து­கொண்­டி­ருந்த விற­கி னால் அவ­னது வாயில் சூடு வைத்­துள்­ள­தாக தெரியவந்­துள்­ளது. 

இதனால் சிறு­வனின் உத­டு­க­ளிலும் முகத்தின் ஆங்­கா­ங்கேயும் எரி­கா­யங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளான சிறுவன் புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அதே­வேளை, சந்­தே­க­நபர் மது­ரங்­குளி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு புத்­தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்க ப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.