பல் துலக்காத 14 வயது, சிறுவன் மீது வாயில் சூடு - மாமா கைது
பல் துலக்காத குற்றத்துக்காக 14 வயதான சிறுவன் ஒருவன் அவரது மாமாவினால் வாயில் சூடு வைக்கப்பட்டு காயப்படுத்தப்பட்ட சம்பவ மொன்று மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தாய் பணியின் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளமையினால் இச்சிறுவன் அவரது மாமாவின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அதன்போது தினமும் காலை பல்துலக்குவதற்கு இச்சிறுவன் முரண்டு பிடிப்பதனால் அவரது மாமா, அடுப்பில் எரிந்துகொண்டிருந்த விறகி னால் அவனது வாயில் சூடு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் சிறுவனின் உதடுகளிலும் முகத்தின் ஆங்காங்கேயும் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
எரிகாயங்களுக்குள்ளான சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபர் மதுரங்குளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்க ப்பட்டுள்ளார்.
Post a Comment