Header Ads



வெளிநாடுகளை நோக்கி JVP பிரமுகர்கள் படையெடுப்பு

"வெளிநாட்டில் நாங்கள் 2017' எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 26 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் ஐவர் கொண்ட குழு கனடாவுக்கு செல்லவுள்ளது.

கனடாவின் டொரிட்டோ நகரில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில்  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் அக்கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

10 நாட்கள் கனடாவில் தங்கியிருக்கும் இவர்கள் பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளனர். கனடாவில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். 

அதேபோல்  ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ஏற்பாடு செய்திருக்கும் மாநாடுகளில் கலந்துகொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க உட்பட அக்கட்சியின் பிரதிநிதிகள் சிலர்  இம்மாத இறுதியில் அங்கு செல்லவுள்ளனர்.

மார்ச் 31 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராஜ்யத்தின் அபுதாபி நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஜே.வி.பி. ஒருங்கிணைப்பாளர் கே.டி.லால்காந்தவும் அன்றைய தினம் குவைத்தில் நடக்கும் மாநாட்டில் கட்சித் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவும் உரையாற்றவுள்ளனர் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 comment:

  1. எதிர்கால இலங்கை ஆட்சியாளர்கள்!

    ReplyDelete

Powered by Blogger.