Header Ads



காத்தான்குடியில் வன்முறை - IS பயங்கரவாதிகளுடன் முடிச்சுப்போடும் தமிழ் ஊடகம்

மட்டக்களப்பு - காத்தான்குடியில் இரு முஸ்லிம் குழுக்களுக்கடையே இடம்பெற்ற மோதலின் போது ISIS தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ஒரு குழு கோசங்களை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளியன்று ஏற்பட் மோதலில் சர்வதேச தீவிரவாத இயக்கமான ISIS அமைப்புக்கு ஆதரவாக கோசங்கள் எழுப்பப்பட்டதாக தேசிய உளவுத்துறைக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக தேசிய உளவுத்துறை தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

உளவுத்துறைக்கு கிடைத்துள்ள ஒளி, ஒலிப்பதிவுகள் உள்ளிட்ட பல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சர்வதேச தீவிரவாத அமைப்பான ISIS க்கும் உள்ளூரில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. இந்த நாசமா போன தவ்ஹீத் ஜமாத் தொடங்கப்பட்ட நாளில் இருந்து முஸ்லிம் சமுகத்துக்கு பிச்சினைதான்.
    யா அல்லாஹ் பணத்துக்கு மாரடிக்கும் இந்த கேவலம் கெட்ட கூட்டத்தை அழித்து நாசமாக்குவாயாக.

    ReplyDelete
  2. நேர்மையாக இந்த விடயங்களை நோக்கினால், தமிழ் ஊடகங்கள் மீது குற்றமில்லை. சண்டையில் சம்மந்தப்பட்ட ஒரு ஜமாஅத், ஐசிஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பயான்கள், போஸ்ட்கள் என்பவற்றை அவர்களது இணையங்களில் வெளியிட்ட ஒரு அமைப்பாகும். இந்த ஜமாஅத் நபர்கள், தலைவர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் மட்டுமே அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பிழையாக வழிநடத்தப் படுவதை விட்டும் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கலாம்.

    ReplyDelete
  3. "இஸ்லாம் சமாதானத்தின் மார்க்கம் என்பது பொய், இஸ்லாம் வாளின் மார்க்கம், காபிர்களோடு யுத்தம் செய்யுங்கள்" என்று சொல்லி பயான் பண்ணும் வீடியோ ஒன்று தற்பொழுது பேஸ்புக் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகின்றது. அதில் உள்ள மவ்லவியே இந்த ஜமாத்தின் தலைவர் ஆவார். தீவிர ஐசிஸ் ஆதரவாளர் ஆவர், அனைவருக்கும் இது தெரியும்.

    ReplyDelete
  4. ELLARUM ALINGHAAL YAARUNGA MICCHAM??
    NANGA AEIN IPOADR IRIKKIROOM???

    ReplyDelete
  5. @nyBawa appidi neenga enna muslima iruntheenga? ungada waliketta jamatha pattri pesinatha kolappinathe neenga thane, neen ga ippidi direct a allahwidam dua kettathe periya visayam, illati neenga kekkurathu abdur raugh solratha thane

    ReplyDelete
  6. Ameen we must joint together to destroy the SLTJ

    ReplyDelete
  7. There's no radical difference between ISIS and LTTE. Both terrorist groups killed innocent civilians for nothing.

    ReplyDelete

Powered by Blogger.