Header Ads



பலவந்த குடும்பக் கட்டுப்பாடு - CID யில் சிங்கள ராவய முறைப்பாடு

பலவந்த குடும்பக்கட்டுப்பாடு குறித்து சிங்கள ராவய அமைப்பு இன்று புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய உள்ளது.

விருப்பத்திற்கு மாறாக பலவந்தமான அடிப்படையில் தம்புள்ள வைத்தியசாலையில் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து புலனாய்வுப் பிரிவினரிடம் சிங்கள ராவய அமைப்பு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்ய உள்ளது.

இவ்வாறு சட்டவிரோத அடிப்படையில் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பு கோரியுள்ளது.

இதேவேளை, தாய்மாரின் விருப்பம் இன்றி இனி வரும் காலங்களில் குடும்பக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்படாது என தம்புள்ள வைத்தியசாலை நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.