Header Ads



தென் கொரியாவில், இலங்கையரின் மனிதாபிமானம்


தென் கொரியாவில் சேவை செய்யும் இலங்கையர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த இலங்கையர் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண்ணொருவரை காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தென் கொரியாவில் வீடு ஒன்று தீ பற்றிக் கொண்ட போது அந்த வீட்டினுள் இருந்த வயோதிப பெண் ஒருவரை இலங்கையர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தினால் குறித்த இளைஞர் தீ காயங்களுக்குள்ளாகியுள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக அவரின் நுரையீரல் பாதிப்படைந்துள்ளது.

அவரது வைத்தியசாலை கட்டணம் மாத்திரம் இலங்கை நாணயத்தில் கிட்டத்தட்ட 16 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த பணம் அவரது நிறுவனத்தின் பிரதானி மற்றும் தீயணைப்பு துறையினரால் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.