கொழும்பு - மருதானை ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை ரயில் தடம்புரண்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த ரயில் மாளிகாவத்தையில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளார்.
தடையை சீர்செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment