Header Ads



"நாட்டிற்கு ஆபத்து ஏற்படுவதை, முன் முன்கூட்டியே அறிபவர் விமல் வீரவன்ச"

எந்த வகையிலும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை என அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நீதிமன்றத்திற்கு கொடுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகவே வீரவங்ச இந்த உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிற்றகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சியின் தலைவர் கடந்த 84 மணி நேரமாக நீர் ஆகாரம் இன்றி இருந்து வருகிறார்.

விமல் வீரவங்ச என்பவர் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் போது அந்த ஆபத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கு எதிராக நாட்டை அணித்திரட்டிய தேசப்பற்றுள்ள தலைவர் எனவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.