உயிர் தப்பிய வஜிரநாயக்க தேரருடன், முஸ்லிம் தூதுக்குழு சந்திப்பு
அண்மையில் வாகன விபத்தொன்றில் சிக்கி மயிறிழையில் உயிர் தப்பிய சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கம்புரு கருவ வஜிர நாயக்க தேரரை முஸ்லிம் தூதுக்குழு ஒன்று களனி பிரிவெனாவிலுள்ள அவரது விஹாரைக்குச் சென்று சுகம் விசாரித்தது.
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலின் ஏற்பாட்டில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. 86 வயதினையுடைய மகாநாயக்க தேரர் பயணித்த வாகனம் கடுகன்னாவில் நூறு அடிக்குக் கீழ் விழுந்த போதும் தேரர் எவ்வித காயமுமின்றி தப்பியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்துக்காக உழைக்கும் எனக்கு இறைவன் மேலும் நாட்டுக்காக உழைக்கும் வாய்ப்பினை தந்துள்ளார் என பேராசிரியர் தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.
Post a Comment