Header Ads



சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்திருந்தவர், விடுதியிலிருந்து சடலமாக மீட்பு

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்திருந்த நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த நிலையில், கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி வருகை தந்த கதிரமலை மகேந்திரராஜா என்ற 34 வயதுடைய நபர், விமான நிலையத்தில் மனைவியிடம் தனது பயணப் பொதிகளை வழங்கி, அவரை யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் உள்ள வீட்டுக்குச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பிறிதொரு பயணப் பொதி விமான நிலையத்தில் உள்ளது பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வருகின்றேன் நீ போ என மனைவியிடம் தெரிவித்தமையால் மனைவி யாழ்ப்பணத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நபரின் சடலமானது கொழும்பில் உள்ள விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என யாழ்.கொடிகாமம் பொலிஸாரிடம் கொழும்பு பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.