Header Ads



“அரசாங்கத்தினால் அவமானத்துக்குள்ளாகும் முஸ்லிம் தலைவர்கள், எம்முடன் இணைய வாருங்கள்”

“அரசாங்கத்தினால் அவமானத்துக்குள்ளாகும் முஸ்லிம் அசியல் தலைவர்கள், எம்முடன் இணைய வாருங்கள்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கோரிக்கை விடுத்தார். புஞ்சிபொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களித்து முஸ்லிம் மக்கள், கடந்த காலத்தை விட தற்போதே தமக்கெதிரான அநியாயங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். ​மேலும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் அரசாங்கத்துக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமக்கும் தமது சமூகத்துக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஒன்று செய்யவில்லை என்பதை உணர்ந்துவிட்டபிறகு, இதற்கு மேலும் ஏன் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறீர்கள்? இந்த அரசாங்கத்துடன் இணைந்து அவமானப்படபோகிறீர்களா? அல்லது எம்முடன் இணைந்து முஸ்லிம் சமூகத்துக்கு நன்மை செய்யப்போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார்.

6 comments:

  1. Oh my god!!!! Don't trust this person... Mr.Azwar? Please do not post or write about him and his news!! May Allah bless you all!!

    ReplyDelete
  2. உங்களுக்கு ஒரெ பகடிதான்

    ReplyDelete
  3. Those Hisbullah, Rizad and Rauf may come with you but not the muslims in SL.

    ReplyDelete
  4. அஸ்வர் மாமா ஒங்களுக்கு மகுடி
    வாங்கித்தரவா??? மிச்சம் நல்ல
    இக்கும்....

    ReplyDelete
  5. அஸ்வர் மாமா ஒங்களுக்கு மகுடி
    வாங்கித்தரவா??? மிச்சம் நல்ல
    இக்கும்....

    ReplyDelete
  6. பேயன் அஸ்வர்

    ReplyDelete

Powered by Blogger.