Header Ads



தொலைப்பேசி நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, பாரிய நிதி மோசடியில் மர்ம கும்பல்

பல்வேறு தொலைப்பேசி நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சீட்டு குலுக்கல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி ஈசி கேஷ் முறையில் பணம் மோசடி செய்துள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் நாடு முழுவதிலும் இருந்து கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சீட்டு குலுக்களில் வெற்றி பெற்றுள்ளதாக தொலைப்பேசி அழைப்புகள், இணைய அரட்டைகள், மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் ஊடாக தகவல் பரிமாற்றம் செய்யப்படுகுிறது. இதன்மூலம் மக்களிடமிருந்து ஈசி கேஷ் முறையில் பணம் பெற்றுக் கொள்ளும் மோசடி ஒன்றே மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய இவ்வாறான தொலைப்பேசி அழைப்புகளுக்கு ஏமாறாமல் இது தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரையில் எந்த ஒரு தொலைப்பேசி நிறுவனங்களும் இவ்வாறான போட்டிகள் ஒன்றையும் நடத்தவில்லை என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.