Header Ads



சிறப்பான எதிர்காலத்திற்கு கோத்தாபாயவை ஜனாதிபதியாகவும், மஹிந்தவை பிரதமராகவும் நியமியுங்கள்

நாட்டின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க வேண்டுமாக இருந்தால் கோத்தாபாய ராஜபக்சவை ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்சவை பிரதமராகவும் நியமிக்க வேண்டும் என முன்னாள் இராதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த மற்றும் கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இருவராலேயே நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதும் கிடையாது. அத்துடன், ரணிலை விட கோத்தாபாய சிறந்தவர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிக்க ஒருபோதும் அனுமதிக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.