இளைஞர் ஆனார் ஜனாதிபதி மைத்திரி (படங்கள்)
“நாட்டிற்காக எழுச்சிபெறும் பொலன்னறுவை இளைஞர் சமூகம்" இளைஞர் முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (11) காலை இடம்பெற்ற உடற்பயிற்சி நிகழ்விலும் கலந்துகொண்டார்.
ஜனாதிபதியின் தலைமையில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்ட இளைஞர் முகாம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன் இது நாடு பூராகவும் முன்னெடுக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள செயற்திட்டத்தொடரின் முதலாவது நிகழ்வாகும்.
இளைஞர் முகாமில் இணைந்துகொண்டுள்ள இளைஞர் யுவதிகளுடன் ஜனாதிபதி அவர்கள் சினேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எளிமையான முறையில் செல்பியும் எடுத்துக்கொண்டுள்ளார்.
Post a Comment