Header Ads



மயக்க ஊசி ஏற்றப்பட்டவர் வபாத் - பொலிஸ் விசாரணை தொடர்கிறது

-JM.Hafeez-

கண்டி மஹய்யவைப் பிதேசத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்திய சாலையில் சாதாரண சத்திர சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் மயக்க ஊசியின் விளைவாக மரணடைந்துள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .(12.3.2017 மாலை). சம்பந்தப்பட்ட வைத்தியர் பிணையில் விடுலை செய்யப்பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பாக முன்னாள் வைத்தியத் துறைப் பேராசிரியர் ஒருவர் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜரானதாக  பொலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மரணடைந்துள்ளவர் கண்டி சுதும்பொல விகார மாவத்தயைச் சேர்ந்த பாத்திமா அஸ்மா என்ற பெண்ணாவார். இவர் 25 வயதடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார். மேற்படி பெண்ணுக்கு மூலவியாதி காணப்பட்டதாகவும் அதற்கு சிகிட்சைபெறச் சென்ற சமயம் சிறிய சத்திரசிகிட்சை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நினைவிழக்கும் ஊசிபோடப்பட்டதாகவும் அதன் பின்பே இவ்விபரீதம் ஏற்பட்டதாக உரவினர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோனைக்கான நடவடிக்க்கள் எடுக்கப்பட்டுள்ளன. கட்டுகாஸ்தோட்டைப் பொலிசார் மேலதிக விசாணைளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.