Header Ads



தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­து, சட்டரீதியாக போராட வேண்டும் - வக்பு சபை தலைவர்

-ARA.Fareel-

தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் இட­மாற்றிக் கொள்ளத் தேவை­யான காணியைப் பெற்றுக்   கொள்­வது எமது உரி­மை­யாகும்.

வக்பு சொத்­து­களைப் பரி­பா­லிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மௌனம் காக்­காது சட்­ட­ரீ­தி­யாக போராட வேண்டும். இது விட­யத்தில் வக்பு சபை தேவை­யான அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார். 

தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்து அவர் கருத்து தெரி­விக்­கையில்;

 ‘தற்­போது தம்­புள்ளை பள்­ளி­வா­சலும் ஏனைய கட்­ட­டங்­களும் 41.49 பேர்ச்சஸ் காணியில் அமைந்­துள்­ளன. அத்­தோடு தம்­புள்ளை நகரிலே பள்ளிவாசல் அமைந்­துள்­ளது. நக­ருக்கு வெளியே பள்­ளி­வா­ச­லுக்கு காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளதால் அதன் பெறு­ம­திக்கு அமை­வாக சுமார் 80 பேர்ச்சஸ் அளவில் ஒதுக்­கப்­பட வேண்டும். 

இதற்­காக பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை, அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகி­யோரைச் சந்­தித்து அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும். பள்­ளி­வாசல் நிர்­வாகம் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­காது விட்டால் எமது உரி­மை­களைப் பெற்றுக்கொள்ள முடி­யாத நிலை ஏற்­படும். 

பள்­ளி­வா­ச­லுக்கு எதி­ராக எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்­டாலும் நாம் எமது சட்­ட­ரீ­தி­யான உரி­மை­களைக் கேட்க வேண்டும். அப்­போதே அவற்றைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக அமையும். 

1950 களி­லி­ருந்து இயங்கி வரும் ஒரு பள்­ளி­வா­சலை எவ­ராலும் மறுக்க முடி­யாது. எனவே பள்­ளி­வாசல் நிர்­வாகம் இது­வி­ட­யத்தில் விட்டுக் கொடுப்­பு­களைச் செய்­யக்­கூ­டாது என்றார். 

இது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம். சலீம்­தீனைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, தம்­புள்ளை பள்­ளி­வா­சலை இட­மாற்றிக் கொள்­வ­தற்கு 80 பேர்ச் காணி வழங்­கப்­ப­டு­வ­துடன் அக்­கா­ணிக்கு அண்­மையில் தற்­போது பள்­ளி­வா­ச­லுக்கு அருகில் வாழும் 28 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

அவ்வாறு வழங்கப்பட்டாலே நாம் இவ்விடத்திலிருந்து நகருவோம். இல்லையேல் எமது உரிமைகளுக்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.