Header Ads



முஸ்லிம் வர்த்தகத்தை, குறிவைக்கும் இனவாதம்

தம்­புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தை தொடர்ந்து அங்கு ஏற்­பட்ட பதற்ற நிலை  கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தணிந்துள்ள போதிலும் அதன் மூலம் அப் பகுதி வர்த்தகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.

இச் சம்பவம் ஒரு வர்த்தக நிலையத்தை மையப்படுத்தியதாக இருந்த போதிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 100 வர்த்தக நிலையங்கள் மூன்று நாட்களாக தொடராக மூடச் செய்யப்பட்டன.  இது அங்கு தொழில் புரியும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இனவாதிகளால் இழைக்கப்பட்ட மிகப் பெரும் அநீதியும் உரிமை மீறலுமாகும்.

இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. அந்த முறைப்பாட்டில் , இந்த சம்பவத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அப் பகுதியைச் சேர்ந்த ஒரு இனவாதக் குழுவினரே தம்புள்ளை நகரிலுள்ள சகல முஸ்லிம் வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு வற்புறுத்தியுள்ளனர். 

இதற்கமைய முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மிகவும் பலவந்தமான முறையில் மூன்று நாட்கள் தொடராக மூடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.  இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிசார் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தம்புள்ளையில் அண்மைக்காலமாக இனவாத சக்திகள் பிரச்சினைகளை உருவாக்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். அந்த வகையில் மேற்படி சம்பவம் தொடர்பிலும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை நடாத்துமாறும் எதிர்காலத்தில் இவ்வாறான இனவாத சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் முஸ்லிம் கவுன்சில் கோரியுள்ளது.

உண்மையில் அப் பகுதி பொலிசார் மிகவும் வெளிப்படையாகவே இனவாதிகளுக்கு சார்பாக செயற்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும். இது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு நியாயமான விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.

இதேவேளை இவ்வாறான தருணங்களில் முஸ்லிம் வர்த்தகர்கள் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவர்கள் மீதுள்ள சமூகப் பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒரு தனி நபர் விடுகின்ற தவறு ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பாதிப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். இதற்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

எனவேதான் இனவாதிகள் முஸ்லிம் சமூகத்தின் வர்த்தகத்தை சிதைப்பதற்கு குறிவைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அந்த சதிவலையில் சிக்கிவிடக் கூடாது என எச்சரிக்க விரும்புகிறோம்.

விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

1 comment:

  1. Muslim viyabaarigal awargalin viyaabaaraththaip
    paathugaththukolla vendum ! Anthach chumaiyai
    ellaa muslimgalinathum thalaiyil poattu
    MUSLIMGALUKU ADIKKIRAAN,MUSLIMGALUKKU ADIKKIRAAN
    ENRU KOOCHCHAL PODAK KOODATHU. ORU KADAIYIL
    NADANTHA PIRACHCHINAIYAI CHAAKKAAGA VAITHTHU
    VERIYARGAL VERITHTHANAM KAATUWATHAIP PONRA
    ADAAVADITH THANANGALUKKU IDAMALIKKAVUM KOODATHU.
    APPADIPPATTA KAADAITHTHANANGAL THANDIKKAPPADUM
    VARAI VIDAVUM KOODATHU . AZEY SAMAYAM INTHA
    NAATIL MUSLIMGAL PILAI SEITHAAL KAADAIYARGAL
    SHATTATHTHAIK KAIYILEDUKKUM NILAMAIYAI THANDIKKUM
    VARAI MUSLIMGAL PORADUM NILAMAI URUVAAGA VENDUM .
    IPPADIPPATTA ORU PORAATAM NIGALAAMAL IRUPPATHATKU
    KAARANAMUM MUSLIMGAL SILARIN VIYABAARANGAL THAAN.
    INTHA VIYABAARANGALIN PAATHUGAPPU AWASIYAMTHAAN
    AANAAL NAM SUYAMARYAATHAIYUM , URIMAIGALUM
    VISHESHAMAAGA ACHCHAMINRI VAALUM URIMAI URUTHI
    SEIYYAPPADA VENDUM . VIYAAPAARATHTHAI KAATI EMMAI
    BLACKMAIL SEIVATHAI ANUMATHIKKAK KOODATHU.

    ReplyDelete

Powered by Blogger.