Header Ads



முஸ்லிம் சகோதரருக்கு, சிங்களவர்களின் பாராட்டு விழா

மீயல்லையைச் சேர்ந்த கிராம சேவை  உத்தியோகத்தர் இனாயத்துல்லா மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்திருக்கும்   "தேவால கமை " கிராம சேவகர் பிரிவில் தனது 39 வருட கால சேவையைப் பூர்த்தி செய்துவிட்டு 11/01/2017 தினம்  ஓய்வு பெற்றுக்கொண்டார்கள் 

ஓய்வு பெற்ற இவருக்கு மகத்தான பிரியாவிடை வைபவம் ஒன்றை அப்பகுதி பெரும்பான்மை இன மக்கள் இன்று (22/01/2017) ஏற்பாடு செய்திருந்தனர் .

இந்த பிரியாவிடை வைபவத்தில் முலட்டியன பிரதேச செயலாளர் ,அப்பிரதேசத்தை சேர்ந்த கிராம சேவை  உத்தியோகத்தர்கள் ,   பிரதான பௌத்த பிக்குகள் , ஊர் மக்கள் , பத்திரிகையாளர்கள்  உட்பட  இன்னும் பலரும் இவரது  39 வருட கால சிறப்புச் சேவையைப்  பாராட்டி கௌரவித்தனர் .  
எமது ஊரைச் சேர்ந்த பல பிரமுகர்களும் , ஆண்களும் ,பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப் பட்டிருந்தது .


(ஹரீஸ், படங்கள்  -ஹுசைன் முஹம்மத்



No comments

Powered by Blogger.