Header Ads



டுபாயில் இலங்கையர் மரணம், சடலம் இலங்கை வந்தது

டுபாயில் இறந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று (17) மாலை இலங்கையில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு சந்திவெளியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான இளையதம்பி சூரியகுமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தொழில் நிமித்தம் காரணமாக டுபாயில் ஒரு கம்பனியில் வேலை செய்ததாகவும், விபத்தில் சிக்கி பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இது தொடர்பாக வைத்திய அறிக்கை கிடைக்க பெற்றுள்ளதாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, டிசம்பர் 02ஆம் திகதி சக நண்பர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்தாகவும் இதனையடுத்து சமூக சேவை நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தொடர்பு கொண்டு இலங்கை அரசாங்கத்தின் மூலம் டுபாயில் இருந்து சடலத்தை இலங்கைக்கு பெற்றுக்கொண்டதாகவும் இறந்தவரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.