Header Ads



சிறையில் இருக்கும் தந்தைக்கு, 8 வயது மகன் எழுதிய கடிதம்

குருவிட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக சிறைக்குச் சென்ற நபருக்கு அவரது 8 வயது மகன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைப்பட்டுள்ள தனது தந்தைக்கு, தனக்கு தெரிந்த மொழியில் சிறுபாலகன் எழுதிய கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

தந்தைக்கு மகன் எழுதிய கடிதம் குருவிட்ட சிறைச்சாலையில் சிறைக் காவலாளியாக சேவை செய்யும் ஒருவரின் கையில் கிடைத்துள்ளது.

அவர் தன்னுடைய உறவினரிடம் குறித்த கடிதத்தை வழங்கியுள்ளார். அவர் அந்த கடிதத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அப்பா நீங்கள் இனி மேல் போதைப்பொருள் விற்பனை செய்யாதீர்கள்.

எங்களுக்கு புதிய ஆசிரியர் ஒருவர் வந்துள்ளார்.

அவர் அம்மாவும், அப்பாவும் என்ன செய்கின்றார்கள் என வினவினார்.

அதற்கு நான், என் அம்மா தம்பியை பார்த்துக் கொள்கின்றார். அப்பா மரக்கறி விற்பனை செய்கின்றார் என கூறினேன்.

அப்பா நீங்கள் மீண்டும் மரக்கறி விற்பனை செய்வீர்கள் அல்லவா?

எனது அப்பாவுக்கு கடவுள் துணை.

இப்படிக்கு உங்கள் தருஷ”.

என அந்தச் சிறுவனின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.