Header Ads



இலங்கைக்குள் IS ஊடுருவியுள்ளதாக றோவிடமிருந்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை - பாதுகாப்பு அமைச்சு

ஐ.எஸ். ஐ. எஸ் . அமைப்பினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக இந்தியாவின் உளவுத் துறையான றோ அமைப்பிடமிரு ந்து எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

முப்படையிலிருந்து உரிய முறையில் விலகிக் கொள்ளாமல் தப்பியோடியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் இலங்கைக்குள்ள ஊடுருவியுள்ளனர் என்று இந்தியாவின் உளவுத் துறையான றோ அமைப்பிடமிருந்து அறிக்கை கிடைத்துள்ளதாக ஊடகங்களே கூறுகின்றதே தவிர உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும் எமக்கு கிடைக்கவில்லை என்றார்.

அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் தொடர்பு பட்டுள்ளனரென்ற விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் இரு முக்கிய அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளனர் இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் என்ன கூற விரும்புகின்றீர்கள் என மற்றுமொரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தொடர்பில் எந்த பதிலையும் நான் கூற விரும்பவில்லை, என்றாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு படையினர் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர் என்றார்.

இதேவேளை, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்; புலிகளை நினைவு கூருவது என்பதே முடியாது மாறாக உயிர் நீத்த உறவினர்களை நினைவு கூருவதில் தவறில்லை.

இந்த விடயம் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் அமைச்சும், பொலிஸ் திணைக்களமுமே பொறுப்பாகும் என்றார்.

ஸாதிக் ஷிஹான் 

3 comments:

  1. Forgot RAW statement, unbelievable .
    Even they saying it is, we are not accept their statement. Indian no 1 corruption country similar news & statement also corrupt.

    ReplyDelete
  2. ரோ சொன்னால், தேவ வாக்கா?

    றோவின் கட்டளைப்படிதான், தமிழ்ப் பயங்கரவாதிகள் அனுராதபுரத்தில் அப்பாவிப் பொதுமக்களை சுட்டுத் தள்ளினார்கள்.

    கூட இருந்தே குழி தோண்டுவதுதான், ரோ என்ற இந்திய நாய்களின் உளவு அமைப்பு.

    ReplyDelete
  3. ஏன் உங்கள் எல்லாருக்கும் RAW வின் பெயரை கேட்டாலே இவ்வளவு அலர்ஜி?

    ஆனால், RAWவும் CIAயும் தான் இலங்கை அரசின் நம்பிக்கையாளர்கள்.

    அதே அரசில் தான் உங்கள் தலைவர்களும் பங்காளர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.