Header Ads



வாகனங்களை பதிவு, செய்து கொள்ளுங்கள் - அரசாங்கம் மீண்டும் ஞாபகமூட்டுகிறது

வாகனங்களை பதிவு செய்து கொள்வதற்கான சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  வாகன உரிமை குறித்த பதிவினை மேற்கொள்ளாது வாகனங்களை வைத்திருப்போர் தங்களது பெயரில் வாகனங்களை பதிவு செய்து கொள்ள சலுகைக் காலம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்தச் சலுகைக் காலம் இன்றைய தினத்துடன் முடிவடையவிருந்த நிலையில்  பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாகனங்களை தமது பெயரில் பதிவு செய்து கொள்ள காத்திருப்பதனைத் தொடர்ந்து சலுகைக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஏ.எச்.கே. ஜகத் சந்திரசிறி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

சலுகைக் காலத்தை நீடிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

1 comment:

  1. வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி பதிவு செய்வது.

    ReplyDelete

Powered by Blogger.