Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக, நகர்த்தப்படும் காய்கள்..!

கடந்த சில காலங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக நகர்த்தப்படும் அனைத்து சதி அல்லது அடக்குமுறைகளையும்  அவதானிக்கும் போது இவை அனைத்தும் ஒரு பலம்பொருந்திய சக்தியினால் திட்டமிடப்பட்டு செயட்படுத்தப்படுகின்றது என்பது தெட்டதெளிவாக விளங்குகின்றது.

மீண்டும் தபுள்ளை பள்ளிவாசல் பிரச்சனை எட்டப்படும் என எதிர்பாத்துள்ள  நிலையில் சிவனொளி பாதமலை பிரச்சனை, SLTJ ஆர்ப்பாட்டம்  அதைத்தொடர்ந்து நாடளாவிய ரீதியாக பெரும்பான்மை சமூக இளஞ்சர்களை ஒன்றுசேர்க்கும் நோக்கில் நடைபெறுகின்ற கூட்டங்களை தொடர்ந்து தற்போது பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பகுதியினரின் மனநிலை முஸ்லீம்களுக்கு எதிரானதாக  மாறியிருப்பதை அவதானிக்க  முடிகின்றது இந்நிலை தொடரும் பட்சத்தில் நாட்டில் எல்லா பகுதிகளிலும் வெளிப்படையாக முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் குழுக்கள் உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை

இந்நிலையை கட்டுப்பாட்டிட்கு கொண்டுவருவதட்கு நாம் காத்திரமான    சில வேலைத்திட்டங்களை செய்ய வேண்டி இருக்கின்றது இது அல்லாமல் இடத்துக்கிடம் கூடி காதைப்பதிலோ   அல்லது எதிர்ப்பு தெரிவித்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் போடுவதிலோ நிலைமை இன்னம் மோசமடையும் வாய்ப்பே உள்ளது

எனவே  எமது தலைவர்கள் ஒரு சிறந்த நிதானமான சில வேலைத்திட்டங்களை  செய்ய வேண்டி உள்ளது

1) அனைத்து மஹல்லாக்களும் (பள்ளிவாயல்களும்)  பெரும்பான்மையினருடன் அண்டி வாழும் முஸ்லீம்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி சிறந்தமுறையில் எந்த பிணக்குகளுக்கு உட்படாமல் வாழ அறிவுத்துவதுடன் அந்த அந்த பகுதி  போலீஸ்  மற்றும் அரசியல் வாதிகளுடன் சிராத்த தொடர்பை பேணா முயட்சிக்க வேண்டும்

2) அனைத்து நிருவாக்கங்களும் தமக்கு மேலுள்ள நிருவாகத்துக்கு இதற்கன  தீர்வை  தேடும்  விதமாக  ஜனாதிபதி  அல்லது பிரதமரின் கவனத்துக்கு இட்டு  செல்ல வேண்டும் என்கின்ற அழுத்தத்தை கொடுக்க வேண்டும்

3) பொறுப்பிலுள்ள தலைமைகள் சகல முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுபற்றி முறைப்பாடு செய்து  ஜனாதிபதி  அல்லது பிரதமரின் கவனத்துக்கு இட்டு  செல்ல வேண்டும்

4)சில இரகசிய காயிநகர்த்தல்களை செய்வது மிக முக்கியம் உதாரணமாக நாட்டில் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் உடனுக்குடன் வெளிநாட்டு தூதுவர்களுக்கு வழங்கி தெளிவுபடுத்தல் வேண்டும்

இவ்வாறான செயல்களை சிறப்பாகவும் திட்டமிட்டு செய்வதட்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் இணைந்து முன்வர வேண்டும் அத்துடன் இதற்கன ஒரு சிறந்த தீர்வை அரசியல் தலைமையே அதாவது ஜனாதிபத்தியோ பிரதமனூடாகவோ மேட்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர எந்த அறிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் பயனளிக்காது  என்பதையும் உணர  வேண்டும்

நிஸாம் பாறூக்

1 comment:

  1. SLTJ wa mozalla ban pannunga.Ellam sari warum.rasik n rasminda citizenship a check pannunga.both r from India I think.kolappawazihal

    ReplyDelete

Powered by Blogger.