Header Ads



யாழ்ப்பாணம் - கிளிநொச்சி முஸ்லிம்கள் பற்றி கலந்துரையாடல்

வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்  கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் யாழ்  கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் பணிமனை தலைவருமான அஷ்ஷெய்க் பி.ஏ.ஏல் சுபியான் மௌலவி மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இன்று (18) காலை நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சி.தவராசாவினால் சமர்ப்பிக்கப்பட்ட  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்கள் கருத்தறி குழுவிடம் வழங்கப்பட்ட அறிக்கைகள்  இதன்போது   அஷ்ஷெய்க் பி.ஏ.ஏல் சுபியான் மௌலவியிடம்  வழங்கப்பட்டது.


No comments

Powered by Blogger.