Header Ads



ஹஜ் ஏற்பாடுகளுக்கு, புதிய சட்டம்

முஸ்­லிம்­களின்  இறுதிக் கட­மையே  புனித ஹஜ்­ஜாகும்.  ஒவ்வோர் முஸ்­லிமும் தனது வாழ்க்­கையில் ஒரு தட­வை­யேனும்  ஹஜ்  கட­மையை நிறை­வேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பு­டனே  காத்­தி­ருக்­கி­றார்கள். 

கடந்த சில வரு­டங்­க­ளாக  இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள் குறிப்­பாக ஹஜ் கோட்டா பகிர்வு முறைகள் பல சவால்­க­ளுக்­குட்­பட்டு வந்­துள்­ளன. தொட­ராக  நீதி­மன்றின் வாசற்­ப­டி­க­ளையும் ஹஜ்­மு­க­வர்கள் ஏறி­யி­றங்­கினர். கடந்த  வரு­டமும் ஹஜ் கோட்டா பகிர்வில் உயர்­நீ­தி­மன்றம் ஏற்­க­னவே வழங்­கி­யி­ருந்த ஹஜ்  வழி­மு­றைகள் (Guide Lines)  மீறப்­பட்டு  விட்­ட­தாக 10 ஹஜ் முக­வர்கள் உயர்­நீ­தி­மன்றில் இறுதி நேரத்தில் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்­தனர். மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள் என்போர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். 

வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது மேலும்  சில ஹஜ் யாத்­தி­ரிகள் தமது பய­ணத்­துக்கு தடை­யேற்­பட்டு விடக்­கூ­டாது என்று  இடை­யீட்டு  மனு­வொன்­றினை  தாக்கல் செய்­தனர். இத­னை­ய­டுத்து கோட்டா பகிர்வு  முறைக்கு அனு­மதி வழங்­கிய உயர்­நீ­தி­மன்றம் வழக்­கினை எதிர்­வரும் ஜன­வரி  26 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது. 

தற்­போது அடுத்த வருட ஹஜ் கட­மைக்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. இது­வரை 10 ஆயிரம் விண்­ணப்­ப­தா­ரிகள் ஹஜ்­ஜுக்­காக விண்­ணப்­பித்து விட்டு காத்­தி­ருக்­கி­றார்கள். எதிர்­கா­லத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை சவால்கள்  ஏற்­ப­டாத வகையில் ஹஜ் பய­ணி­க­ளுக்கும்  ஹஜ் முக­வர்­க­ளுக்கும் பாதிப்­புகள் இல்­லாத வகையில் முன்­னெ­டுப்­ப­தற்கு முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளார். 

இதற்­கென சட்­ட­மூ­ல­மொன்­றினைத் தயா­ரித்து பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து நிறை­வேற்றிக் கொள்­ள­வுள்ளார். இதற்­கான ஏற்­பா­டுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. சட்­ட­வ­ரை­புக்­கான உத­வி­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு ஓய்வு பெற்ற உயர்­நீ­தி­மன்றின் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அரச ஹஜ் குழு  முன்னாள் நீதி­ய­ர­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­டலை இன்று ஆரம்­பிக்­க­வுள்­ளது. 

ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென சட்­ட­மொன்றை நிறை­வேற்றிக் கொண்டால் எதிர்­கா­லத்தில் ஹஜ் விட­யங்­களில் சவால்கள் தவிர்க்­கப்­படும். ஹஜ்­ஜா­ஜி­களின்  நலன்­களும்  ஹஜ் முக­வர்­களின் நலன்­களும் சட்­டத்தின் மூலம் பாது­காக்­கப்­படும். எவ­ருக்கும் நீதி­மன்ற படி­க­லே­ற­வேண்­டிய தேவை ஏற்­ப­டாது. 

முஸ்­லிம்கள் தமது சமய, கலா­சார விட­யங்­களில் பெரும்­பான்மை இன­வா­தி­க­ளினால் பல சவால்­களை எதிர்­நோக்­கி­யுள்ள இக்­கா­ல­கட்­டத்தில், ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென  தனி­யான சட்­ட­மொன்­றினை இயற்­றிக்­கொள்­வது அவ­சி­ய­மா­ன­தாகும். இது விட­யத்தில் நாம­னை­வரும் ஹஜ் சட்ட வரை­புக்கு ஆலோ­ச­னை­களை வழங்க வேண்டும். ஹஜ் முக­வர்கள் தமது வர்த்­தக நோக்­கத்­தையே அடிப்­ப­டை­யாகக் கொள்­ளாது ஹஜ் ஏற்­பா­டு­களை ஒரு புனித கட­மை­யாக கருத வேண்டும். ஹஜ்  ஜாஜி­களின் நலன்­பேண தமது ஒத்­து­ழைப்­பு­களை வழங்க வேண்டும். 

திட்­ட­மிட்­டுள்­ள­படி எதிர்­வரும் ஆறு­மாத காலத்­திற்குள் ஹஜ்  சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டால் ஊழல்களற்ற இறுதிநேர இழுபறிகளற்ற  ஹஜ் பயணத்தை பயணிகள் எதிர்பார்க்கலாம். அமைச்சர் ஹலீம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள ஹஜ் சட்ட மூலத்தில் முகவர்களின் நலன்களை விட ஹஜ்ஜாஜிகளின் நலன்களும் எதிர்பார்ப்புகளுமே  அடங்க வேண்டும் என நாமும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். 

1 comment:

  1. Following are some of my suggestions

    1.First time Haj Piligramage should be given very minimum charge.
    2. Charges must be high when someone go for haj 2nd and 3rd time and so on
    3.charges must be clearly explained.

    ReplyDelete

Powered by Blogger.